வனாந்திரத்தின் அந்தரத்தில்.
ஆதிக் காட்டின் பசுமையையெல்லாம்
குடித்து குடித்துக் கூவியோடிய மலை ரயில்
பாதியில் தனது பயணத்தை முடித்துக் கொள்கிறது.
பேரண்டத்திலிருந்ததையெல்லாம்
பேசிக் களித்த ஒருவனின்
தொடர்பு துண்டிக்கப்படும்பொழுது.
--கார்த்திக் முருகன்
கூடடைய விரும்பாததொரு கரும் பறவை, இரை தேடிச் செல்லும் வழியெங்கும், ஓற்றையடிப் பாதைகளை பிரசவித்துச் செல்கிறது... --கார்த்திக் முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக