6 மே, 2014

'தர்ம'புரி

1)

இளவரசன்
இளவரசி

அம்பிகா'பதி'
அமரா'வதி'

பதி
பாதி

வதி
மீதி

விதி
வீதி

சதி
சாதி.

2)

பின்னந்தலை பிளந்தபடி
விண்மீன்களை
எண்ணிக் கொண்டிருக்கிறேன்

சரக்கு ரயிலொன்று
கடந்து கொண்டிருக்கிறது
'மாம்பழங்களைச்' சுமந்தபடி

உன் இருப்புப் பாதையிலிருந்து
தெறித்து விழுந்த
சில்லறைக் காசு நான்.

--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை: