சங்கீதம் பற்றி
எதுவும் தெரியாதென்ற பிறகு
ஒட்டடை படிந்த
வீட்டின் முற்றத்தில்
பல்லாங்குழிகளைப்
பார்த்தவாறே
ஒதுங்கிக் கொள்ளலாம்.
தானே
வேர் பிடித்து
துளிர்விட்ட
கான்க்ரீட் செடிகளுக்கு
ஆரோகணம்
அவரோகணம் பற்றிய
கவலையில்லை
பெருந்தாகம் தீர்க்கும்
சங்கீதம் மட்டுமே
முக்கியம்
அவைகளுக்கு..
--கார்த்திக் முருகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக