21 ஜனவரி, 2014

கொக்கு

உலுக்கியெடுக்கப்பட்ட
ஒரு மரத்தின் இலையை

ஓயாத அலைகள் கொண்ட
குளத்தில் எறிகிறது
வன் புயலொன்று

பச்சையம் நிறைந்த
மரத்தின் வலியை

ஒரு படகு போல
மெல்ல
அசைத்து அசைத்து

கரைக்குக் கடத்துகின்றன
அலைகள்


இரண்டு கால்களையும்
ஊன்றியபடி

மீன்களைத் தேடிக்
கொண்டிருக்கிறது

எதுவும் அறியாத
ஒரு கொக்கு.

--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை: