26 அக்டோபர், 2014

மழை

1)
உனக்கு விருப்பப்பட்ட திசையில்
நடந்து கொண்டே இரு.
அடர்ந்த இவ்வனத்தின்
ஏதாவதொரு இலையிலிருந்து
தவறி விழக்கூடும்
எங்கேயோ எப்போதோ
புறப்பட்ட என் மழைத்துளி.

2)
அந்தக் குடையை மடக்கு
உன் முகந் தெரியவில்லையென்ற
வருத்தத்தில்
 ஓலமிடுவது
மழைத்துளிகள் மட்டுமல்ல...

--கார்த்திக் முருகன்.

கருத்துகள் இல்லை: