4 மார்ச், 2014

இடம்

அவர்கள் சந்தித்தபொழுது
நாம் எங்கிருந்தோமோ
அதே இடத்தில்தான்
இன்னும் இருக்கிறோம்

நடக்கும் வாய்ப்போ
நகரும் வாய்ப்போ
நமக்கு இல்லை

அவ்விடம் தவிர்த்து
எவ்விடம் சந்தித்தாலும்
அவ்விடத்திலிருந்தே
நம்மை நினைவு கூரும்

பாசி படிந்த அவர்களின்
நினைவுச் செல்களிலிருந்து
அழிப்பதற்காகவேனும்

நாம்
நகர்ந்து தொலைக்க வேண்டும்
அல்லது
நகர்த்த்த்தப் பட வேண்டும்.

--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை: