அப்பா என்பதற்கு
'அபா' என்கிறாய்
அம்மா என்பதற்கு
'அமா' என்கிறாய்
பிடி என்பதற்கு
'பீபீ' என்கிறாய்
நீ இடாதவற்றை
நான் இட்டு நிரப்பியதில்
தெறித்துச் சிதறுகிறதென்
மணிப்பிரவாளம்.
--கார்த்திக் முருகன்
கூடடைய விரும்பாததொரு கரும் பறவை, இரை தேடிச் செல்லும் வழியெங்கும், ஓற்றையடிப் பாதைகளை பிரசவித்துச் செல்கிறது... --கார்த்திக் முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக