பருக்கைகளுக்கிடையேயான
தேடலில்
அகப்பட்ட கற்துண்டுகள்.
இருக்கிறேனென்ற சப்தத்துடன்
வெப்பக் காற்றை கீழ்த்தள்ளும்
மின்விசிறி.
உனக்கிது போதுமென்ற தொனியில்
ஊற்றப்பட்ட
மாதிரிச் சாம்பார்.
விக்கலின் இடையே
பிடித்த அபிநயத்தால்
கிடைத்த
குவளைத் தன்ணீர்.
எதுவுமே நிரப்புவதற்கு
தயாராயில்லை
அம்மாவின் கைமணத்தை.
-கார்த்திக் முருகன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

1 கருத்து:
ஹ்ம்ம்ம்ம்.....
நடக்கிறதுதான் கார்த்திக்....
-ப்ரியமுடன்
சேரல்
கருத்துரையிடுக