மசியில்லை
கொட்டிக் கிடக்கும்
கவிதைகள்
விசாரிக்க
ஆளில்லை
விசித்து விசித்தழும்
வெள்ளருவி
விழுந்து புரளவும்
எவருமில்லை
பச்சை போர்த்திய
புல்வெளி
சன்னலோர
இருக்கை கிடைத்தும்
உங்கள் பயணமெல்லாம்
கண்களை மூடியபடியே..
--கார்த்திக் முருகன்
கூடடைய விரும்பாததொரு கரும் பறவை, இரை தேடிச் செல்லும் வழியெங்கும், ஓற்றையடிப் பாதைகளை பிரசவித்துச் செல்கிறது... --கார்த்திக் முருகன்
1 கருத்து:
நல்லா இருக்கு கார்த்தி
-ப்ரியமுடன்
சேரல்
கருத்துரையிடுக