7 செப்டம்பர், 2009

புகைப்படங்கள்

புகைப்படங்கள் என்னைப்
புரட்டத் தொடங்கியபொழுது
அடர்ந்த வனத்திற்குள்
ச்சில்லென்ற ஓடை நீரில்
கால் நனைத்தபடி
நடக்கத் தொடங்கியிருந்தேன்
அகவல்களும் உறுமல்களும்
சல சலக்க
ஒரு சில தவளைக் கற்களும்
மண்டையோடுகளும் தட்டுப் பட்டு
மலை உச்சியில் வழிந்தோட
ஆரம்பித்த கணத்தில்
கை நிறைய மயில் தோகைகளோடும்
நகக் கீறல்களோடும்
கரை ஏறியிருந்தேன்.
--கார்த்திக் முருகன்.


கருத்துகள் இல்லை: