11 செப்டம்பர், 2009

பிசாசுகள்

இன்ன பிற
கதைகளில் கேட்டவாறில்லை
பிசாசுகளின் உருவங்கள்

சவரம் செய்த முகத்துடன்
வசீகரப் புன்னகையுடனே
வலம் வந்தன

எவரும் கவனிக்காத பொழுதொன்றில்
தத்தம் இருப்பிடத்திலிருந்து
நகரத் துவங்கிய
அவைகளின் முன்னெடுப்புகள்
என் இருக்கையை நோக்கியது
என்று உணரத் துவங்கியபின்
ஓட்டமும் நடையுமாய்
அதன் வீதிகளைக்
கடக்கத் துவங்கினேன்

அவை
தங்களுக்குள்
கை குலுக்கிக்
கூடிச் சிரித்துக் கொண்டன

அவைகளின் உதட்டு
முத்ததில்
இனிப்பும் புளிப்பும்
கலந்து பரவுவதாக
குட்டிப் பிசாசொன்று
என் காதருகே
கூவிச் சென்றபோது

என்
பற்கள் நீண்டு
கடைவாயோரம்
குருதி வழிந்து
கொண்டிருப்பதை
உணர முடிந்தது.

--கார்த்திக் முருகன்

3 கருத்துகள்:

padmanaban சொன்னது…

dai.....nee kavignan da

Padmanaban சொன்னது…

உனக்கு....."கவிதை செம்மல்" என்ற பட்டம் அளிக்கிறேன்

Karthik சொன்னது…

அதுக்கு பதிலா எதாவது 'கம்மல்' வாங்கி அனுப்பு. வித்தாவது பொழச்சுக்குறேன்.