சுற்றுகளில் ஓடி
பழக்கப் பட்டவர்கள் நீங்கள்.
என்னைத் தட்டி எழுப்பி விட்டு
எதிரும் புதிருமாய்
அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
ஒருசில சுற்றுகள் முடிந்த பின்னும்
உங்களைப் பிடித்துவிடும் திராணி
வாய்த்து விடவில்லை எனக்கு.
இது என் முறை.
மிகக் கவனமாய்
என் காதுகளைப் பின் நிறுத்தி
நீங்கள் தொட்டு விடாத தூரத்தில்
தலை தெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறேன்.
மீண்டும்
தட்டியெழுப்ப வியலாத இடத்தில்
இருத்திக் குந்தும் வரை.
--கார்த்திக் முருகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

6 கருத்துகள்:
Nice one Karthi,
-priyamudan
sEral
Thanks, Sera.
--Karthik
//நீங்கள் தொட்டு விடாத தூரத்தில்
தலை தெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறேன்.
மீண்டும்
தட்டியெழுப்ப வியலாத இடத்தில்
இருத்திக் குந்தும் வரை//
அருமை..
மிக்க நன்றி, சுபஸ்ரீ இராகவன்.
//மிகக் கவனமாய்
என் காதுகளைப் பின் நிறுத்தி
நீங்கள் தொட்டு விடாத தூரத்தில்
தலை தெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறேன்//
சட்டுன்னு வந்து மனசுல ஒட்டிக்கிச்சு :)
கவிதை அருமைங்க!
மிக்க நன்றி ,ஆயில்யன்.
கருத்துரையிடுக