1 அக்டோபர், 2013

வலுத்தோர் வாக்கு

கதவுகள் அடைத்ததொரு
கோட்டையில்
காற்றாய்

படைகளற்றதொரு
நாட்டில்
பண்டாரமாய்

பிணங்கள் இடும் ஒரு
காட்டில்
பிரேதமாய்

இரு.

இல்லாமல் போவதை விட
இருத்தலில் ஒன்றும்
குறைந்துவிடப் போவதில்லை.

--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை: