4 அக்டோபர், 2013

அலைகள்

சர சரவென்று
சருகுகள் அசைய
அலைகளை
உண்டாக்கியபடி
கானலுக்குள்
நீந்திக் கொண்டிருக்கிறது
வற்றிய குளத்திலிருந்து
வெளியேறிய நீர்ப்பாம்பு.

--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை: