4 அக்டோபர், 2013

வா!

அடீ என் பார்வதி

கயிலை அல்ல
உனக்குச் சொல்லாமல்
மயிலைக்கு கூட செல்ல மாட்டேன்

இந்தா
அழகு நிலாவை
வைத்துக் கொள்

உன் சாமியாட்டத்திற்கு
ஏதுவாய் உடுக்கையையும்
உனதாக்குகிறேன்

எங்கே
நீ ஒளித்து வைத்த
சிகரெட்டுகளில் ஒன்றை
ஓடோடிக் கொண்டு வா!

--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை: