7 அக்டோபர், 2013

தொடர்வண்டி நிலையம்

இங்கிருந்து
எவனோ
எவனையோ விளிக்கிறான்
கூட்ட நெரிசலில்

கவலை இல்லாத
தலைகள்
சற்றே திரும்பி
பார்க்கின்றன

எஞ்சியவை
எதை எதையோ யோசித்தபடி
விரைந்து கொண்டிருக்கின்றன
தூரத்தில்..

இரண்டு நடைமேடைகளையும்
சேர்த்து நிற்கிறது
நீண்டதொரு
தொடர்வண்டி.

-கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை: